Saturday, January 19, 2019

அதோ வருது... இதோ வருது... பக்கத்தில் வருது’ என்று சொல்லிக் கொண்டு இருந்த எக்ஸாம், நம்ம டேபிளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துடுச்சு. முன்னாடியே எதிர்பார்த்து பிளான் பண்ணின விஷயம்தான். ஆனாலும், இந்த நேரத்தில் என்ன செய்யலாம்?

நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை தரும் ராக்கெட் டிப்ஸ்!

''ஐந்தே ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தினால் தேர்வுகளில் சாதிக்கலாம்'' என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்குங்கள்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி, ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு நோ சொல்லுங்கள்.

தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை அப்படியே விட்டுவிட்டு, அடுத்தத் தேர்வுக்குத் தயாராகுங்கள். முடிந்தவை மாறப்போவது இல்லை. நாளைய பொழுதை நமதாக்கலாம். வாழ்த்துகள்.

0 comments:

Post a Comment