இறால் - அரை கிலோ
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

இறாலை , உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து நீரை வடிகட்டி விடவும்.
தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து வறுக்கவும்.
ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு அரைக்கவும். பி ன் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.
தக்காளி நன்கு மசிய வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, நன்கு கிளரி பின் அதில் அரைத்த தேங்காய் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் இறாலைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து நன்கு கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும் .
இறால் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.
சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.