Saturday, February 9, 2019

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள்மிகையாகதுநெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம்தினமும் ஒரு நெல்லிக்கனிசாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டுநெல்லிக்கனியில்சிறு நெல்லிபெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான்அதிக மருத்துவ குணம் கொண்டது.
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாதுஇளமையின் வேகம்செயல்பாடு,புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லைஆனால் முதுமையை வென்றுஎன்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன்அனுபவமிக்க இளைஞனாகசிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.
முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால்அவர்களின் உணவுக் கட்டுப் பாடும்உடற்பயிற்சியும்தான்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்துஅந்த முமுமையையும் இளமையாககொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயதுமுதியவர்போல் தோற்றமளிக்கின்றனர்அதற்கு காரணம் முறையற்ற உணவு,உடற்பயிற்சியின்மையே.
இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும்இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர்என்ற சித்தர் தான் எழுதிய
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
  
பொருள்
முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்கநெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல்சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம்அறிகிறோம்இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.
நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர்வரை அறிவர்ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதுமுதுமையை விரட்டும்தன்மை கெண்டது.
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய்நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலைநன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும்சுவை சொல்லிமாளாதுநெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும்நன்றாக இருக்கும்அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால்பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராதுதண்ணீர் தாகமும் எடுக்காது இவைஎல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.
சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும்அதியமான்அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியைபற்றி பாடி உள்ளனர்.
மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்குஅதிகளவான வைட்டமின் 'சிஉள்ளது.ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சிஉள்ளது.

100 
கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளதுநெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100மில்லிகிராமிற்குச் சமம்மேலும் இதில் தாதுப்புக்களும்இரும்பு சத்தும் நிறைந்துக்காணப்படுகிறது.
நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:
நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம்அதுபோல் இதன் சிறப்பைஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
ஆப்பிளைவிட மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளதுஅஸ்கார்பிக் அமிலம் என்னும்உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்துஉட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
எச்..விஇன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
இதய வால்வுகளில்இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்படவைக்கிறதுஇருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும் கார்போஹைட்ரேட்நார்ச்சத்துஇரும்புச்சத்துகரோட்டின்கால்சியம்பாஸ்பரஸ்,வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
வாய்ப்புண் தீர
நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்துவாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
பித்தம் குறைய

15 
கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லிஆக வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம்தணியும்.
இரத்த கொதிப்பு நீங்க
நெல்லி வற்றல்பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாககாய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல்கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
கண் நோய்கள் தீர
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால்கண்நோய்கள் தீரும்நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால்கண்கள் குளிர்ச்சிபெறும்.
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலைமாலை அருந்திவந்தால் கண்புரைநோய்கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்நெல்லிக்காய்கடுக்காய்தான்றிக்காய்மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்துசாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

0 comments:

Post a Comment