Saturday, February 9, 2019

குரூப்-1 முதனிலைத் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பாடத்திட்டம், தேர்வுத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதே தேதி மாற்றத்திற்கான காரணம் என டி.என்.பி.எஸ்.சி., விளக்கமளித்துள்ளது. மாற்றப்பட்ட
குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புதிய பாடத்திட்டத்தின்படி விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அவகாசம் வழங்கவே தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது. மேலும் டி.என்.பி.எஸ்.சி., 
குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment