ஹூப்ளி: வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தாலே பத்திக்கொண்டு வருகிறது எல்லாருக்கும்! இப்படியும் ஒரு தகப்பன் இருப்பாரா? என்று கூடவே எரிச்சல் கேள்வியும் எழுகிறது.
கர்நாடகத்தின் ஹூப்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 வயது குழந்தையுடன் தந்தை அந்த பகுதியில் பிச்சை எடுக்கிறார்.
பிறகு பிச்சை எடுத்த பணத்தில் மதுக் கடைக்குப் போய் ஃபுல்லா சரக்கு ஏத்திக்கிறார். சென்னம்மாசிலை என்ற இடத்தில் அப்படியே மட்டையாகி கீழே நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார்.உலகமே தெரியாத அந்த குழந்தையோ தன் போதையில் விழுந்து கிடக்கும் தன் அப்பாவை எழுப்ப போராடுகிறது. அப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ற வார்த்தையை தவிர அந்த குழந்தைக்கு வேற வார்த்தைகள் எதுவும் வரவில்லை. தன் பிஞ்சு கைகளால் கன்னத்தை தட்டி தட்டி எழுப்புகிறது அந்த குழந்தை.
மிரண்ட குழந்தை
பிறகு சுற்றுமுற்றும் மிரண்டு பார்க்கிறது... அந்த நேரம் பார்த்து ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது. ஏற்கனவே பயந்து போன குழந்தை, நாயை பார்த்து இன்னும் மிரளுகிறாள். இப்படியே குழந்தை ஒரு மணி நேரம் தன் அப்பாவை எழுப்பி கொண்டிருக்கிறாள்.அந்த பக்கமாக போய் கொண்டிருந்த யாரோ ஒரு நபர், இந்த காட்சியை பொறுக்க முடியாமல் வீடியோவாக எடுத்து இணையத்தில் போட்டு விட்டார். இந்த வீடியோவை பார்த்தாலே வயிறு எரிகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.