Monday, May 13, 2019

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள்களை உருவாக்குவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சிவன், "விண்வெளி துறையில் இளம் விஞ்ஞானிகளையும், ஆய்வுகளையும் ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதில் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு செயற்கை கோள்களை உருவாக்குவது தொடர்பாக ஒரு மாதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
இதற்காக பெரும்பாலும் 8ம் வகுப்பு நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான செலவை இஸ்ரோ ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளும், கல்வி நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
விண்வெளி துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான ஆய்வு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்க்கெலா, இந்தூர் நகரங்களில் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில் இதுபோன்ற ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு மேலும் 54 செயற்கை கோள்கள் தேவைப்படுகின்றன. அவற்றை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.