பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
பழமொழி :
Desire is the root of all evil
ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்
பொன்மொழி:
அதிர்ஷ்டத்தின்
விளையாட்டுதான்
ஒரு மனிதனின்
வாழ்க்கை.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.கேரளா அரசு சின்னம்?
இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்
2.கர்நாடகா அரசு சின்னம்?
மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்
நீதிக்கதை
(The Gardener and the Monkeys)
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர் ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.
இன்றைய செய்தி துளிகள்
1.தீபாவளி பண்டிகையொட்டி ஸ்வீட் கடைகளை ஆய்வு செய்ய குழுக்கள் : உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்
2.வனத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ், கருணைத் தொகை அறிவிப்பு
3.தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்
4.தீபாவளியை முன்னிட்டு நவ.5 வரை நியாய விலை கடைகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
5.5-வது ஒருநாள் போட்டியில் வெ.இண்டீஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழத்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
2.வனத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ், கருணைத் தொகை அறிவிப்பு
3.தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்
4.தீபாவளியை முன்னிட்டு நவ.5 வரை நியாய விலை கடைகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
5.5-வது ஒருநாள் போட்டியில் வெ.இண்டீஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழத்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.