Thursday, October 25, 2018

2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஎஸ் 4 வகை வாகனங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பதிவு ஆகியவற்றை 2020 மார்ச் 31 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவ தாகவும், ஏப்ரல் 1லிருந்து பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பிஎஸ் 4 வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடு தேதிக்கு முன்னரே பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை 2020 மார்ச்சுக்குப் பிறகு ஆறு மாதம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பிஎஸ் 6 வகை வாகனங்களின் உற்பத்தியை 2019 டிசம்பரிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும். இது சற்று கடினமானது என்று வாதிட்டனர். இந்த விவகாரத்தில் பெட்ரோ லியத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் முன்பு இருந்த நிலைபாட்டிலிருந்து முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன. முன்பு, 2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அனு மதிக்கக்கூடாது என கூறியிருந் தன. ஆனால், தற்போதுகெடு தேதிக்குப் பிறகு சில மாதங் கள் அனுமதிக்கலாம் என ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூறியுள்ளன. ஆனால், உச்ச நீதிமன்றம் உறுதி யாக மறுப்பு தெரிவித்துவிட்டது. 2020 மார்ச் 31 வரை மட்டுமே பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரிவித்துள் ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.