செட்டிநாடு நாட்டுக்கோழி பிரியாணி (Chettinad Chicken Biryani)
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - 1 கிலோ
சீரக சம்பா அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 8
புதினா - 1 சிறிய கட்டு
கொத்தமல்லி - 1 சிறிய கட்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
முந்திரி - 5
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 2 அங்குலம்
பூண்டு - 15 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடலை எண்ணெய் - 150 மில்லி
செய்முறை :
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், சின்ன வெங்காயம், 3 பச்சை மிளகாய், முந்திரி, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
குக்கரில் 100 மில்லி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த நாட்டு கோழி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
200 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விடவும். நாட்டுக்கோழி வேக சற்று நேரம் எடுக்கும்.
குக்கர் விசில் அடங்கியதும் திறந்து 1 பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்ததும் ஊறிய அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கிளறி 2 விசில் மட்டும் விடவும். விசில் அடங்கியதும் அரிசி உடையாமல் கிளறி இறக்கி தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
சூப்பரான கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி பிரியாணி தயார்!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.